
புதுச்சேரி காந்தி வீதியில் அரிசி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிளீனர் ஒருவர் மினி லோடு வேனை இயக்க ஆசைப்பட்டு மதுபோதையில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி அரிசி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கிளீனர் மற்றும் வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.