
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ்நகர்-செலாக்கி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் சாலை விபத்து ஒன்று சம்பவம் நடந்தது. டேராடூன் பௌண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நிகாம் சாலை நோக்கி வந்த ஒரு கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது மோதியது.
அரசு ஆதர்ஷ் இன்டர் பள்ளி முடிந்த நேரத்தில் மாணவர்கள் வெளியே வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவத்தில் 7 மாணவர்கள், ஒரு வழிப்போக்கர் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அதோடு ஒரு கார் சேதமடைந்தது.
देहरादून में तेज रफ्तार कार ने कुचल दिया स्कूली बच्चों को। हादसा बुधवार दोपहर का है जब सेलाकुई में स्कूली बच्चे छुट्टी के बाद घर लौट रहे थे। तेज रफ्तार कार ने बच्चों को रौंद दिया। जिसमें 8 बच्चे घायल हो गए वहीं दो गंभीर घायलों को हायर सेंटर रेफर कर दिया गया।#Uttarakhand pic.twitter.com/gfRtURQX38
— Pyara Uttarakhand प्यारा उत्तराखंड (@PyaraUKofficial) April 23, 2025
விபத்துக்குப் பின்னர், அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள துல்கோட் மற்றும் ஜாக்ரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ தரப்புகள் தெரிவித்துள்ளன.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்ததுபோல், கார் வேகமாக வந்ததை தெரிவித்தனர். இந்த விபத்தில் கார் மற்ற மூன்று வாகனங்களையும் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர், மனநல மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் விக்ராந்த் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.