வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும் விஷ்ணு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த நிலையில் நேற்று மாலை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமி தற்கொலை செய்து கொண்ட அறையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தால் என் ஆன்மா சாந்தி அடையும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் குடிப்பழக்கத்தால் ஒரு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.