
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சத்யன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கவுன்சிலர் நாகவல்லி பாண்டி கண்ணன் கூறியதாவது, மறவமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து கவுன்சிலர் கந்தசாமி கூறியதாவது, பெரும்பாலான பகுதிகளில் நெல் விளைச்சல் இல்லை. அதனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கவுன்சிலர் மகேஸ்வரன் கூறியதாவது, சொர்ணவள்ளி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.