அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம் இல்லாத கைகளை கொண்டவர்களோடு போட்டியிட்டு இரட்டையர் பிரிவில் தங்கமும், தனிநபர் போட்டியில் வெண்கலமும் வென்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என குறிப்பிட்டுள்ளார். அவருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதற்காக நாங்களும் பெருமை கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார். இதுவரை இந்த பதிவினை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பலரும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் தன்னுடைய பேரன்களுடன் சேர்ந்து 83 வயதான பாட்டி கேரம்போர்டு விளையாடும் வீடியோவுடன் அந்த பதிவு வெளியாகி உள்ளது.
அடடே சூப்பர்.. கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயதான பாட்டி… பேரன் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more