மகாராஷ்டிர மாநிலத்தில், முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த தம்பதியினர் தங்களது சொந்த வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் “இது என் வீடு…” என்று சொல்லி மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வயதில், அந்தத் தம்பதியின் வாழ்க்கை இப்படி ஒரு சோகமான முடிவைச் சந்தித்திருப்பது காவல்துறையினரையும் அப்பகுதி மக்களையும் உரைய வைத்துள்ளது. நள்ளிரவு ஒன்றரை மணியளவில் தனது தாய்க்கு அந்த நபர் அனுப்பிய ஒரு குரல் பதிவு இந்த மர்ம மரண வழக்கிற்குள் ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இரவில், நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த நபர் தனது தாயாரின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் பதற்றமான தொனியில் ஒரு குரல் பதிவை அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில் அவர் பேசிய வார்த்தைகளும், அவரது குரலில் இருந்த பயமும், அந்த வீட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது.
மறுநாள் காலையில் தாயார் அந்த மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக மகனின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, தம்பதியினர் இருவரும் உயிரற்ற நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார். தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நள்ளிரவில் அனுப்பப்பட்ட அந்த இறுதிக் குரல் பதிவை மையமாகக் கொண்டு, தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அசம்பாவிதம் எதுவும் நடந்ததா அல்லது வேறு யாரேனும் வீட்டிற்குள் புகுந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டார்களா என்ற பல கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நள்ளிரவு குரல் பதிவு தந்த திருப்பம், இந்த மர்ம மரண வழக்கை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
