ஞாயிற்றுக்கிழமை அன்று தெலங்கானா மாநிலத்தில்  17 வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்ற வாடகை கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் தேவாலயத்திற்குச் சென்று கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்களும் இந்த விபத்தில் பலத்த சேதமடைந்தன.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது ஒரு மைனர் சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அதிவேகமாக வந்த கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் மோதியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காயமடைந்த இரண்டு சகோதரர்களும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“>

இந்த விபத்து குறித்து  காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மைனர் சிறுவனுக்கு வாடகை கார் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.