டி20 மும்பை லீக் கிரிக்கெட் தொடரில், சோபோ மும்பை பால்கன்ஸ் (SoBo Mumbai Falcons) அணியின் கேப்டனான இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், மைதானத்தின் நடுவே அசத்தலாக படுத்துறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வருகிறது. போட்டியின் போது நடுவர் எடுத்த டிஆர்எஸ் (DRS) ரிவியூ முடிவு வெளியாவதற்குப் பல நிமிடங்கள் தாமதமானதால், களத்தில் நின்றுகொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடும் பொறுமையிழந்து காணப்பட்டார். இந்த நீண்ட தாமதத்தால் கடுப்பான அவர், “அடேய்.. எவ்வளவு நேரம்டா எடுத்துப்பீங்க!” என்று ஹிந்தியில் புலம்பியபடியே, யாருமே எதிர்பாராத விதமாக மைதானத்தின் நடுவே ஜாலியாக மல்லாக்க படுத்து தூங்க ஆரம்பித்தார்.
Incase you missed this 😭
– Shreyas Iyer was literally sleeping in the middle of yesterday's match. pic.twitter.com/9trXACLyXd
— Vihaan. (@Vihaann96) June 3, 2026
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு முன்னணி வீரர், போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் இப்படி கேஷுவலாக படுத்துக் கிடந்த விசித்திரமான காட்சி, அங்கிருந்த ரசிகர்களையும் கமெண்டேட்டர்களையும் ஒரே நேரத்தில் சிரிக்கவும், வியக்கவும் வைத்தது. ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த ஜாலியான குறும்புத்தனம் மும்பை லீக் தொடரில் ஒரு மறக்க முடியாத சுவாரசியமான தருணமாக மாறியுள்ள நிலையில், அவரது சோபோ பால்கன்ஸ் அணி இந்தத் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், ஸ்ரேயாஸின் இந்த அலப்பறை வீடியோ இணையத்தில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
