டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில், விராட் கோலியிடம் ஆட்டோகிராப் வாங்க முடியாமல் ஒரு சிறுவன் அழுதுகொண்டே சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் போது, அந்த சிறுவன் கோலியை அணுக முயன்றார்.

ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஏமாற்றமடைந்த அந்த சிறுவன், விரக்தியில் தனது பேட்டை தூக்கி எறிந்துவிட்டு கண்ணீருடன் அங்கிருந்து சென்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஆர்சிபி பந்துவீச்சாளர்களின் அதிரடி தாக்குதலால் வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி, 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. விராட் கோலி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.

“>

 

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. விராட் கோலி தற்போது 351 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பி பந்தயத்தில் நான்காவது இடத்தில் உள்ளார்.