தனது மனைவி ஹோட்டல் வரவேற்புத் துறையில் (Hotel Reception) வேலைக்குச் சேர்ந்ததை அறிந்த கணவன் ஒருவர், மனைவியின் அலுவலகத்திற்கே சென்று கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த சக ஊழியர்களுக்கு முன்னிலையிலேயே தனது மனைவியை மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார். “உனக்கு கரியர் வேண்டுமா? வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறாயா? எல்லையைத் தாண்டாதே” என அவர் ஆவேசமாக மிரட்டும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

​விவாகரத்திற்குப் பிறகு உனக்கு விருப்பமான வேலையைப் பார்த்துக்கொள், ஆனால் இப்போது நான் அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி அந்த நபர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டார். பெண்ணின் சுயசார்பு மற்றும் வேலைக்குச் செல்லும் உரிமையைத் தடுக்கும் விதமாக நடந்த இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் முன்னேற்றத்தைத் தடுத்து, பொது இடத்தில் வைத்து அவரை இழிவுபடுத்திய கணவனின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.