பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான அவரது உறவு குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடி, ஏன் டிரம்பைப் பார்த்து இவ்வளவு பயப்படுகிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பற்றித் தனக்குத் தெரிந்த சில ரகசியத் தகவல்களைத் தான் இன்னும் வெளியிடவில்லை என்றும், ஒருவேளை அந்தத் தகவல்களைத் தான் பகிரங்கமாக வெளியிட்டால், பிஎம் மோடி தனது பதவியையே ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அதிரடியாக எச்சரித்துள்ளார்.
Why is India’s third term PM, Modi, so scared of US President, Donald Trump ? Americans, whom I know, say that Modi is compromised-by what and whom I cannot yet reveal, which would lead to Modi’s resignation as PM.
— Subramanian Swamy (@Swamy39) March 10, 2026
சமீபகாலமாகவே டிரம்பின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு மோடி பணிந்து போவதாகவும் சுவாமி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது இந்தப் பதிவு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
