பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில், ஒரு காய்ந்த ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க கிராம மக்கள் கையாண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிணறு மிகவும் குறுகலாக இருந்ததால் பெரியவர்கள் உள்ளே இறங்க முடியவில்லை. இதனால், ஒரு சிறுவனின் உடலில் துணிகளையும் கயிறுகளையும் கட்டி, அவனை ஆபத்தான முறையில் கிணற்றுக்குள் இறக்கினார்கள். மேலே இருந்தவர்கள் கயிற்றை பிடித்துக் கொள்ள, கீழே சென்ற சிறுவன் துணிச்சலாக ஆட்டுக்குட்டியைப் பிடித்து பத்திரமாக மேலே வந்தான். அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், இந்த மீட்புப் பணி பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
कुएं में गिर गया था बकरी का बच्चा तो लोगों ने बच्चों को लटका कर बकरी के बच्चें को निकाला। pic.twitter.com/hRSX5HKwN0
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) February 24, 2026
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மக்களிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. கிராமப்புறங்களில் அவசர காலத்திற்கு தீயணைப்புப் படையினரோ அல்லது மீட்புக் குழுவினரோ உடனடியாக வராத சூழலில், மக்கள் தங்களால் முடிந்த முயற்சியைச் செய்து ஒரு உயிரைக் காப்பாற்றியதை சிலர் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், ஒரு சிறிய ஆட்டுக்குட்டிக்காக ஒரு சிறுவனின் உயிரைப் பணயம் வைத்து இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தது மிகப்பெரிய தவறு என்றும், இது போன்ற ஆபத்தான செயல்களை ஊக்குவிக்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
