உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில், குழந்தையுடன் தரையில் அமர்ந்திருந்த பெண்ணை பிச்சைக்காரி எனத் தவறாக நினைத்து ஒரு நபர் பணம் கொடுத்த சம்பவம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் தனது குழந்தையை அரவணைத்து அமைதியாக அமர்ந்திருந்தபோது, அந்த வழியாக வந்த நபர் ஒருவரின் ‘தவறான புரிதல்’ அன்பான செயலாக மாறியது.
View this post on Instagram
அந்தப் பெண்ணின் நிதானமான மற்றும் கனிவான ரியாக்ஷன் பலரையும் கவர்ந்துள்ளது. “உலகில் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்” என இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
