சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. அந்த வீடியோவில், சாலையோரம் கட்டப்பட்டிருந்த ஒரு ஏழைச் சிறுவனின் ஊஞ்சலை காவல்துறை அதிகாரி ஒருவர் அகற்றுவது போல் முதலில் தோன்றுகிறது.
மேலும் பொதுவாக சட்டத்தை நிலைநாட்ட கண்டிப்புடன் செயல்படும் காவல்துறையினரின் வழக்கமான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், அடுத்த சில நொடிகளில் அந்த அதிகாரி செய்த செயல் அனைவரையும் நெகிழச் செய்தது. அந்தச் சிறுவனின் வறுமையையும் ஆசையையும் புரிந்து கொண்ட அவர், அந்த ஊஞ்சலை அகற்றுவதற்குப் பதிலாக, அவரே முன்வந்து அந்தச் சிறுவனை ஊஞ்சலில் அமர வைத்து மகிழ்ச்சியுடன் ஆட்டிவிட்டார்.
View this post on Instagram
“>
இந்நிலையில் காவல்துறையினரின் கடமைக்கும் அப்பால் இருக்கும் ஒரு கனிவான இதயத்தை வெளிப்படுத்திய இந்த வீடியோ, வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “சட்டம் என்பது தண்டிக்க மட்டுமல்ல, எளியவர்களின் மகிழ்ச்சியைப் பாதுகாக்கவும் தான்” என்பதை இந்த நிகழ்வு அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இதனை ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்த அதிகாரியின் செயலைப் பாராட்டி வருவதுடன், “நிச்சயமாக இந்த அதிகாரி இணையவாசிகளின் இதயங்களை வென்றுவிட்டார்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீருடைக்கு பின்னால் இருக்கும் ஒரு அன்பான மனிதரை அடையாளம் காட்டிய இந்த நிமிடம், இன்றைய இணைய உலகின் மிகச்சிறந்த ‘வைரல்’ தருணமாக மாறியுள்ளது.
