மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு ஒரு மூன்று சக்கர வண்டி (Tricycle) கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துப் போராடி வந்துள்ளார். உடல் ஊனமுற்ற அந்த ஏழை மனிதர், தனக்குச் சுதந்திரமாக நடமாட ஒரு வண்டி வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் ஆட்சியர் அலுவலக வாசலையே கதியாகக் கிடந்துள்ளார். ஆனால், அந்த எளிய மனிதரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதில், அந்த மாவட்ட ஆட்சியர் அவரைத் தனது அலுவலகத்தை விட்டு மிகவும் அலட்சியமாகவும், கொடூரமாகவும் வெளியேற்றியுள்ளார். ஒரு அதிகாரியின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்தவர்களையும், இந்த வீடியோவைப் பார்ப்பவர்களையும் கடும் ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
This video is from Shivpuri, Madhya Pradesh.
This Muslim man is differently abled. All he wants is a tricycle for himself.
He has been running around the Shivpuri Collectorate office for the past two years.
On this day, the collector kicked him out of his office.
The… pic.twitter.com/MiZ3ANMMZQ
— Dr Nimo Yadav 2.0 (@DrNimoYadav) January 22, 2026
பாஜக ஆட்சியில் தனக்கு எந்தப் பாதிப்பும் வராது, தட்டிக் கேட்க ஆளில்லை என்ற திமிரிலேயே அந்த அதிகாரி இப்படி நடந்துகொண்டதாக அந்த எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு பக்கம் நாடு வல்லரசாக மாறுகிறது என்றும், ‘அமிர்த காலம்’ என்றும் முழக்கங்கள் போடப்படும் நிலையில், அடிப்படை உதவிக்காகக் கெஞ்சும் ஒரு மாற்றுத்திறனாளியை ஒரு உயர் அதிகாரி காலால் எட்டி உதைக்காத குறையாக வெளியேற்றுவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதாக உள்ளது. அந்த இளைஞர் மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் பேசும் அந்தக் காணொளி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த அதிகாரிக்கு எதிராகப் பெரும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
