சீனாவில் இந்திய இளைஞர் ஒருவர் ஆதரவற்ற முதியவருக்கு உதவி செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹுசைன் மன்சூரி என்ற அந்த நபர், சாலையோரம் பசியுடனும் சோர்வுடனும் அமர்ந்திருந்த ஒரு முதியவரை அணுகி, அவருக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்கினார்.
மேலும் வெறும் உணவோடு மட்டும் நிற்காமல், அந்த முதியவரின் கையைப் பிடித்து ஆதரவு தெரிவித்து, அவருக்குப் பண உதவியும் செய்தார். அந்த முதியவர் உணர்ச்சிவசப்பட்டு அந்த இளைஞரை அணைத்துத் தனது நன்றியைத் தெரிவிக்கும் காட்சிகள் காண்போரின் கண்களைக் குளமாக்குகின்றன.
View this post on Instagram
“>
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. “மனிதநேயத்திற்கு எல்லைகளோ, தேசமோ கிடையாது” என்று சமூக வலைதளப் பயனர்கள் இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
இது மொழி தெரியாத அந்நிய தேசத்திலும் ஒரு முதியவரின் துயரத்தைக் கண்டு ஓடிச் சென்று உதவிய அந்த இளைஞரின் செயல், மனிதநேயம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அன்பும் கருணையும் இருந்தால் எத்தகைய தடைகளையும் கடந்து மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
