ஈரானில் நிலவும் கடுமையான இஸ்லாமியக் கட்டுப்பாடுகளைத் துணிச்சலுடன் எதிர்த்து, ஹிஜாப் அணியாமல் பொதுவெளியில் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களைச் செய்த இளம்பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நாட்டின் சட்டப்படி பெண்கள் பொது இடங்களில் தலைக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், அந்தப் பெண் எவ்வித அச்சமுமின்றித் தனது திறமையை வெளிப்படுத்தியது, அந்நாட்டு அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஒரு வலிமையான போராட்டமாகக் கருதப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அந்தப் பெண்ணின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தனிநபர் சுதந்திரக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பெண்களின் உடை மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் தார்மீகக் காவல் துறையினரால் இத்தகைய செயல்களுக்குச் சிறைத்தண்டனை அழிக்கவில்லை.

அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், சுதந்திரத்திற்காக அந்தப் பெண் மேற்கொண்ட இந்த முயற்சி உலக அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “சுதந்திரத்தின் குரலை யாராலும் ஒடுக்க முடியாது” என்று இணையவாசிகள் அவரை ஒரு புரட்சிகர அடையாளமாக முன்னிறுத்தி வருகின்றனர்.