இந்திய ராணுவம் நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது வலிமையைப் பெருக்கி வருவது நாட்டு மக்களிடையே பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வீரர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் வகையில் ரோபோடிக் நாய்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த இயந்திர நாய்கள் கரடுமுரடான மலைப் பாதைகள் மற்றும் பனி படர்ந்த சிகரங்களில் வீரர்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டவை. அதேவேளையில் அண்டை நாடுகளுக்கு உதவும் இந்தியாவின் கொள்கைப்படி அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட புயல் பாதிப்பின் போது அங்குள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவப் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடல்சார் நட்பு நாடு என்ற அடிப்படையில் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் இந்தியாவின் பாதுகாப்புத் திறன் மற்றும் நட்புணர்வை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.