லண்டனின் ஹேய்ஸ் (Hayes) பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு பொதுத்துறை இரட்டை அடுக்கு பேருந்தின் மேல் தளத்தில் இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆணும் பெண்ணும், பிற பயணிகள் இருக்கிறார்கள் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் பகிரங்கமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த சக பயணி ஒருவர், தனது செல்போனில் அந்த காட்சியைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இப்படிப்பட்ட அநாகரிகமான செயல்களை அனுமதிக்கக் கூடாது” எனத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே அந்த பேருந்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த ஜோடி நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இது போன்ற பொது இடங்களில் அநாகரிகமாக நடப்பவர்கள் மீது லண்டன் போக்குவரத்துத் துறை மற்றும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.