உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு வாள், அரிவாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களை விநியோகித்துள்ளனர். வங்கதேசத்தில் நிலவுவதைப் போன்ற ஒரு சூழல் இங்கும் ஏற்பட்டால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
In UP's Ghaziabad, members of Hindu Raksha Dal distribute sword, machette and axe to residents in the housing society to kill Muslims during "Bangladesh-type" situation. pic.twitter.com/amAIF3zERH
— Piyush Rai (@Benarasiyaa) December 30, 2025
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளியில், ஒரு கும்பல் கையில் ஆயுதங்களுடன் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருக்கும் மக்களுக்கு வாள்களை வழங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தப் பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
