வங்கதேசத்தில் நவீன ஆடைகளை (Modern dress) அணிந்ததற்காக இரண்டு இளம் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்கள் நவீன உடைகளை அணிந்திருப்பது தங்களின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, ஒரு நபர் அவர்களைப் பொதுவெளியில் வைத்து மிகக் கடுமையாகத் தாக்குகிறார்.



இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் உடை சுதந்திரத்தில் தலையிட்டு, இப்படி அநாகரீகமான முறையில் வன்முறையில் ஈடுபடுவதைக் கண்டு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.