பிலிப்பைன்ஸில் விடுமுறைக்குச் சென்ற ஆண்டி மெக்கனெல் என்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, உலகின் மிகவும் ஆபத்தான கடல் உயிரினங்களில் ஒன்றை, அதன் ஆபத்து தெரியாமல் கையால் தொட்டு விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீச்சலில் இருந்தபோது, அவர் ஒரு சிறிய, வண்ணமயமான ஆக்டோபஸைப் பார்த்திருக்கிறார். அது எவ்வளவு ஆபத்தானது என்று தெரியாமல், அதைத் தொட்டு வீடியோவும் எடுத்துள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோ வைரலான பிறகு, அது நீல வளைய ஆக்டோபஸ் (Blue-ringed octopus) என நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டது. ஆஸ்திரேலிய கடல் அறிவியல் நிறுவனம் உட்பட நிபுணர்கள், அதன் பிரகாசமான நீல வளையங்கள் அதன் கொடிய விஷத்தை வெளிப்படுத்தும் அறிகுறி என்று எச்சரித்துள்ளனர்.
இந்த ஆக்டோபஸ் வெளியிடும் ‘டெட்ரோடோடாக்சின்’ (Tetrodotoxin) என்ற விஷம், சயனைடைவிட 1,000 மடங்கு ஆபத்தானது என்றும், இது தசைகளைப் பக்கவாதமாக்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த ஆக்டோபஸ் ஆண்டி மெக்கனெலைத் தாக்காததால், அவர் எந்தச் சேதமும் இன்றித் தப்பியுள்ளார்.
