ஹைதராபாத்தில் நாராயணகுடா பகுதியில் முகமது வாசிக்கு என்ற காய்கறி வியாபாரி, அசுத்தமான முறையில் காய்கறிகளைக் கையாள்வது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பொதுமக்களின் கோபத்தைத் தூண்டிய நிலையில், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தது. இந்தக் காணொலியில் அந்த வியாபாரி, தனது தனிப்பட்ட பாகங்களைத் தொட்டுவிட்டு, அதே கைகளால் காய்கறிகளைக் கையாள்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

 

பொதுச் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்ட புகாரை அடுத்து, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவியவுடன், காவல்துறை உடனடியாக இந்தச் சம்பவத்தை விசாரித்தது. முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, நாராயணகுடா காவல்துறையினர் வாசிக்குவைக் கைது செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அவருக்கு 5 நாட்கள் சிறைத்தண்டனையும், 2500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும், அதிகாரிகள் அவரது கடையை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதி வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறை உடனடியாகச் செயல்பட்டதற்கும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ததற்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுகாதார விதிமுறைகளை மீறுவோர் அல்லது பொது நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.