ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில், ஜெய் கிஷன் என்ற போலீஸ்காரர் தனது முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு குழந்தைகளுடன் ஹோட்டலுக்கு வந்த முதல் மனைவி ரீனா, திருமணத்தை நிறுத்தினார்.
ரீனாவைக் கண்ட போலீஸ்காரர் ஜெய் கிஷன் குழப்பத்தில் குளியலறைக்குள் ஒளிந்து கொண்டார். 2011-இல் திருமணம் செய்த இவர்கள், எட்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். ரீனா தனியாகக் குழந்தைகளை வளர்க்கிறார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார், திருமணத்தை நிறுத்திவிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ்காரர் மற்றும் திருமணம் செய்ய இருந்த பெண் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
