உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியில், 17 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது சகோதரியின் மாமியார் வீட்டுக்குச் சென்ற அந்த சிறுமி, அங்கு ஒரு அறிமுகமான இளைஞருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அவர்களை தாக்கியுள்ளனர்.

அந்த சிறுமி தப்பிச் செல்ல முயன்றபோது, அவர்கள் பிடித்து கொடூரமாக அடித்ததோடு, பின்பு அனைவரும் மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகள் தேடினர்.

சனிக்கிழமை இரவு முதல் தீவிரமாக செயல்பட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான இரு இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் தப்பிக்க முயன்று துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். போலீசார் எதிர்வினையாக சுட்டதில், 33 வயதான லலித் காஷ்யப், காயமடைந்து கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரது கூட்டாளி, 20 வயதான மேராஜ், ஹரௌனி ரயில்வே நிலையத்தில் வைத்து மற்றொரு போலீஸ் குழுவினால் கைது செய்யப்பட்டார். இதேவேளை, மற்றொரு முக்கிய குற்றவாளி தப்பித்த நிலையில், போலீசார் அவரை மடக்கி பிடிக்க வேட்டையை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.

இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையான சட்ட நடவடிக்கையில் கொண்டு வருவதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.