ஐதராபாத் முஷீராபாத் பகுதியில் உள்ள பிரபலமான அரேபியன் மந்தி உணவகத்தில், ஒரு வாடிக்கையாளர் தனது பிரியாணி தட்டில் இறந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த ஆண்டு இந்த உணவகத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான காட்சியை வாடிக்கையாளர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது வைரலாகி, பரவலான விமர்சனங்களைப் பெற்றது. வீடியோவில், பிரியாணியில் கரப்பான் பூச்சி தெளிவாகத் தெரிய, வாடிக்கையாளர் உணவக ஊழியர்களை எதிர்கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
Now eat in Arabic restaurants and Mandi Biryanis.🤮
People should question all those so called influencers who promote such restaurants.
Cockroach Found in Arabian Mandi Biryani in Hyderabad.
A customer was shocked after finding a cockroach in the biryani at Arabian Mandi… pic.twitter.com/f3xOyoLXCE
— Tathvam-asi (@ssaratht) September 10, 2025
வீடியோவில், காவலர் ஒருவர் உணவகத்தில் இருந்தபோதும், அவரது அலட்சியப் போக்கு வாடிக்கையாளரை மேலும் கோபப்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இதுவரை அதிகாரப்பூர்வ புகார் அல்லது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், உணவகத்தின் சுகாதார நிலை குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, உணவு பாதுகாப்பு மற்றும் உணவகங்களில் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
