தெலங்கானாவின் ஆசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள ஜைனூர் மண்டலத்தின் சுகுட்பள்ளி ஆஷ்ரம் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ஜே. விலாஸ் மது போதையில் வகுப்பறைக்கு வந்து, நாற்காலியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார்.
இந்தக் காட்சி வீடியோவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. வீடியோவில், 4-5 வயது குழந்தைகள் புத்தகங்களுடன் தரையில் அமர்ந்து வகுப்பு தொடங்கக் காத்திருக்க, ஆசிரியர் எழ முடியாமல் தரையில் புரள்வது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தைக் கண்டு கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Drunk teacher caught sleeping in school in Asifabad’s Jainoor Mandal.
He was suspended for neglecting duty and vilating rules. @TheSiasatDaily #Telangana pic.twitter.com/svJKRhRRv9
— Mohammed Baleegh (@MohammedBaleeg2) September 4, 2025
இதையடுத்து, மாவட்ட ஆதிவாசி நலத்துறை துணை இயக்குநர் ரமா தேவியின் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஆசிரியர் ஜே. விலாஸ் கடமையில் அலட்சியம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டது உறுதியானதால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
