மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஊழியர்களை மிரட்டி சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர், இதனால் அங்கு பணிபுரிந்த சோனு சிங் சர்தார் என்ற ஊழியர் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால், கொள்ளையர்கள் அவரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
🚨 Daring petrol pump robbery at gunpoint
Newly opened petrol pump in Purulia, #WestBengal witnessed a film-style heist!
Owner Heeralal Barman said five armed criminals rode in on two bikes, threatened staff at gunpoint, and looted nearly Rs 1 lakh before fleeing towards… pic.twitter.com/wFr5sulozj
— Nabila Jamal (@nabilajamal_) September 1, 2025
இந்த கொள்ளை சம்பவம் முழுவதும் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் இந்த வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
