மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. வலுவான வெள்ளப்பெருக்கு கடலில் தவறி விழுந்த முதியவர் ஒருவரை, அருகிலிருந்த யாரும் காப்பாற்றாதது மட்டுமின்றி, அவரைப் பார்த்து விமர்சனமும், கேலியும் செய்த வீடியோ மனித நேயத்தின் குறைவுக்கு சாட்சியாக உள்ளது.
Maharashtra: A Yavatmal man gets carried away in river; the incident was caught on camera@fpjindia #MaharashtraNews #viralvideo #Yavatmal #news pic.twitter.com/tdbQYYsIMC
— Manasi (@Manasisplaining) August 31, 2025
வீடியோவில், நதிக்கரையில் நிற்க முயன்ற அந்த முதியவர், அருகே வந்த இளைஞர் ஒருவர் அவரை பிடிக்க முயன்றபோது, அந்த முதியவர் நீருக்குள் இழுத்து செல்லப்பட்டார். அந்த நேரத்தில், “ஏய்! ஆளே போச்சு!” என கத்தும் குரல்களும், உதவுவதற்குப் பதிலாக வீடியோ எடுத்தது மட்டும் இடம்பெறுகிறது. ஏமாற்றமளிக்கும் விஷயமாக, அந்த இளைஞரும் பின்னோக்கி நடந்துசெல்ல, மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து விட்டனர்.
இந்த வீடியோ வைரலான பிறகு, சமூக வலைதளங்களில் சிலரது மனமுடைந்த கருத்துகள் வரவேற்பு பெற்றாலும், பலர் அந்த முதியவரையே பழித்தும், கேலி செய்தும் பதிவிட்டிருப்பது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. “இவனுக்கு என்ன அவசரமா அவ்வளவு வெள்ளத்தில் போனான்?” எனவும், “நாளை உடல் கிடைக்கும் போது சொல்லாதீங்க” எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
