சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வனவிலங்கு வீடியோ, நெட்டிசன்களை மயக்கி வருகிறது. தண்ணீர் நிரம்பிய குளத்தில் குட்டிகள் மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது, அவற்றைப் பாசமாகவும் எச்சரிக்கையுடனும் காப்பாற்றி நிற்கும் புலியின் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த 25 விநாடிகள் கொண்ட மனதை வருடும் வீடியோவை ஓய்வுபெற்ற இந்திய வன சேவை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
A mother’s eye never rest-the tigress guards the cub as they play cooling their body in a waterhole🩷
Tigers are rare among big cats.They love water. It regulates their body temperature,relieves parasites,biting insects & helps them to conserve energy.
Natures Air Conditioners. pic.twitter.com/6PzkvixAiv— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) August 17, 2025
“>
அவர் இந்த வீடியோவை பகிர்ந்தபோது, “தாயின் கண்கள் ஒருபோதும் தூங்காது. குட்டிகள் தண்ணீரில் தங்கள் உடலை குளிர்விக்கும்போது அவற்றைப் பாதுகாக்கும் புலி” என்று குறிப்பிட்டார். மேலும் புலிகள் தண்ணீரை விரும்பும் மிகக் குறைந்த பெரிய பூனைகளில் ஒன்றாகும் என்றும், தண்ணீர் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுவதோடு, பூச்சிகளிலிருந்து விடுபடவும், ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகிறது என்றும் நந்தா விளக்கினார்.
Step by step- trunk to trunk, the Cute baby discovers the magic of water under Mamas watch….
Every drop of water is a drop of hope.Let’s make sure this moment never disappears. RT for a future where elephants roam free.#world elephant day. pic.twitter.com/3GUsvabCN0— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) August 12, 2025
“>
இந்த அழகான காட்சியை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். ஒருவர் “அற்புதமான தருணம்” என்று கருத்து தெரிவித்திருக்க, மற்றொருவர் “அழகாகப் பிடிக்கப்பட்ட வீடியோ” என பாராட்டியுள்ளார். இதற்கு முன்னர், சுஷாந்த் நந்தா யானை மற்றும் அதன் குட்டிக்கிடையிலான நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்திருந்தார். அதிலும், தாயின் அருகில் குட்டி யானை தண்ணீரில் இறங்கி விளையாடிய காட்சி அனைவரின் மனதையும் வருடியது.
