இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக பங்கிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் அந்த வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இருசக்கர இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பைக் அணைக்காமல் பெட்ரோல் போட்டுள்ளார்.

 

அப்போது திடீரென தீ பற்றி எரிந்தது. இதையடுத்து பைக்கில் வந்த வாலிபர் பைக்கை விட்டு உடனடியாக இறங்கி வண்டியை அணைத்தார். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஊழியர் பெட்ரோல் போடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.