வங்காளதேசத்தில் 21 வயதுடைய திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோலமில்லா மாவட்டத்தில் உள்ள முரட்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராம்சத்திரப்பூர் பகுதியைச் சேர்ந்த இந்து மத 21 வயது இளம்பெண் தனது தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

அங்கு இந்து மத நிகழ்ச்சிகள் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த பஜர் அலி (36) என்பவர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் மிரட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் அவருடன் வந்தவர்கள் அதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பகுதி மக்கள் உடனடியாக பஜர் அலியை மடக்கிப்பிடித்து அடித்துள்ளனர். இருப்பினும் பஜர் அலி தப்பி ஓடி உள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தப்பி ஓடிய குற்றவாளிகளான பஜர் அலி மற்றும் 4 பேரை கைது செய்துள்ளனர். வங்காளதேசத்தில் இதுபோன்ற தொடர்ந்து சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று இதுபோன்று பாதிப்புக்கு உள்ளானது. மேலும் இது குறித்து மத்திய வெளி விவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியதாவது, வங்காளதேச அரசு இந்துக்களையும் அவர்களுடைய சொத்துக்கள் மற்றும் அந்த வழிப்பாட்டு தலங்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும் என கூறியுள்ளார்.