
சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவர் ஈ சிஆர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் 2 மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் திடீரென மோகன் ராஜை மறைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் மர்ம நபர்களை கைது செய்வதற்காக 2 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.