
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் பாலிகர் என்ற பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றின் அருகே புதிதாக ஒரு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிட வேலையில் 9 பேர் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஹோட்டல் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த 9 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.