
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோனேகவுண்டனூர் வனப்பகுதியில், 8 மாத கர்ப்பிணியான இளம்பெண் ஒருவரை கழுத்தில் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாலினி என்ற பெயருடைய இந்த பெண், பல்லேரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியின் மகள் என அடையாளம் காணப்பட்டார். கடந்த 19ம் தேதி வனப்பகுதியில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய செல்போன் சிக்னலினை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதிலேயே கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.
விசாரணையின் போது, சம்பவ இடத்தில் மேலும் இரண்டு நபர்களின் கைபேசி சிக்னல்கள் பதிவாகியிருந்ததை தொடர்ந்து, மேகநாதன், புகழேந்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் ஷாலினிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதியழகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஷாலினி மதியழகனை விட்டு பிரிந்து தனது முன்னாள் காதலன் ஆஞ்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் உடன் ஷாலினிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் ஷாலினி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனால் ஷாலினி கர்ப்பமானார்.
தற்போது 8மாத கர்ப்பிணியாக இருக்கும் ஷாலினி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேகநாதனை வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் மேகநாதன் ஷாலினியை கொலை செய்ய திட்டமிட்டார்.
சம்பவம் நடந்த அன்று தனது உறவினர் புகழேந்தியுடன் சேர்ந்து கொலை திட்டம் தீட்டியுள்ளார். அந்த திட்டத்தின்படி இருவரும், ஷாலினியை இரவுத் நேரத்தில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பேச்சுவார்த்தை நடத்திய போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷாலினியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார்கள். பின்னர் அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி மரத்தில் கட்டி தூக்கிலிட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.