
சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களை மையமாகக் கொண்டு மின்னஞ்சல் மிரட்டல்கள் அனுப்பியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த தகவல் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில போலீசாரை அதிரவைத்தது. தொடர்ந்து நடத்திய கண்காணிப்பில், அந்த மின்னஞ்சல்கள் சென்னை–யிலிருந்து அனுப்பப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் IT தொழில்நுட்பத்தை கொண்டு செயல்பட்ட குற்றப்பிரிவு, மென்மையான சாகச நுட்பங்களை மீறி ரெய்னி ஜோஷிலாவை கைது செய்தது.
இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, ரெய்னி ஒரு பன்னாட்டு நிறுவனமான டெலாய்ட்டில் மூத்த ஆலோசகராக பணியாற்றி வந்தவர். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் சோகமான பின்னணி வெளியாகியுள்ளது. ஒருதலை காதலில் இருந்த ரெய்னி ஜோஷிலா, தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததைத் தாங்க முடியாமல், கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் போலி மெயில் ஐ.டி. உருவாக்கி, VPN மற்றும் டார்க் வெப் வழியாக மின்னஞ்சல்கள் அனுப்பி உள்ளார்.
இது போலி மின்னஞ்சல்களால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டதோடு, பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.