
சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியில் 50 வயதான சார்லஸ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் தேக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவர் வாரம் ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு செல்வது வழக்கம். இவர் மசாஜ் செய்வதற்காக அங்கு சென்ற நிலையில் அங்கு வேலை பார்க்கும் ஆண்ட்ரியா என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஆங்கிலோ இந்திய அழகியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதால் அடிக்கடி இருவரும் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கடந்த 29ஆம் தேதி ஆண்ட்ரியா சார்லஸ்-ஐ தனக்கு தெரிந்த ரேகா சாவித்திரி (60) என்பவரது சொகுசு விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதாவது அங்கு வந்தால் வித்தியாசமான உல்லாசம் அனுபவிக்கலாம் இரவு நேரத்தில் இன்ப விருந்து காத்திருக்கிறது என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறிய நிலையில் அதை நம்பி சார்லஸூம் அங்கு சென்றார்.
அப்போது ரேகா சாவித்திரி மற்றும் 2 ஆண்கள் அங்கிருந்தனர். அந்த இரண்டு ஆண்களும் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறி சார்லசை சரமாரியாக அடித்தனர். இதில் சார்லஸ் மயங்கி விழுந்த நிலையில் பின்னர் இருவரும் அவர் அணிந்திருந்த 20 சவரன் தங்க நகைகள், விலை உயர்ந்த கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்தனர். பின்னர் google pay மூலமாக 40,000 ரூபாய் பணத்தையும் பறித்த நிலையில் பின்னர் அவரை அங்கிருந்து அடித்து விரட்டினர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரேகா சாவித்திரி, நவீன் குமார் (23) ஆகியோர் பிடிபட்டனர்.
இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆண்ட்ரியா மற்றும் அவரது காதல் கணவர் கோகுலகிருஷ்ணாவை வலைவீசி போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.