மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கட்சியின் தலைவர்கள் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது,

முருகப்பெருமானின் புகழைப் பரப்புகின்ற நிகழ்வு இது. உண்மையிலேயே இன்று அனைவரும் திகைத்துப் போய் இருக்கின்றனர். எத்தனையோ தடங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த தடைகளை எல்லாம் படிக்கிற்களாக மாற்றி இன்று இந்த நிகழ்வு நடக்கிறது.

இந்த மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வந்துள்ளார். தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக தெலுங்கை படிக்கலாம். நயினார் நாகேந்திரன் தெலுங்கில் பேசிவிட்டார் என்று கூறுவார்கள். நாங்கள் ஏதாவது ஒரு மூன்றாவது மொழியைப் படிக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்.

நம் பக்கத்தில் இருக்கும் தெலுங்கு மொழியை படிக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி எல்லாம் ஒரே கலாச்சாரம் மற்றும் பண்பாடுதான். மலையாளம் கன்னட மொழிகள் இருக்கும் நிலையில் அதுவும் நம்முடைய கலாச்சாரம்தான். மேலும் இது எல்லாம் ஒருமித்த கலாச்சாரம் என்று கூறினார்.