திருநெல்வேலியில் மானூர் ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள் புரத்தில் கண்ணன்(48), அங்காளஈஸ்வரி(44) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் அடிக்கடி. தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் பிரச்சனை செய்த போது, அதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாகப் பேசி அரிவாளால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அங்காளஈஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கண்ணனை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.