
சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதனால் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெறவேண்டிய அவசியம் கிடையாது.
கனவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என்று கூறினார். கணவனிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் ஒரு பெண்ணை கணவனின் உடைமையாக கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது என்று நீதிபதி விமர்சித்தார். மேலும் திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை என்றும் தெரிவித்தார்.