
மணமாலை அணிந்தவுடன் புதிய வாழ்க்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில், மே 11, 2025 அன்று ராஜா ரகுவன்ஷியும் சோனமும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திலேயே மேடையில் ஒருவரால் கேட்கப்பட்ட “ராஜா நீ போய்விட்டாய்…” என்ற வார்த்தைகள், ஒரு வாரத்தில் பலரது மனதையும், நெஞ்சையும் கிள்ளும் விதமாக நிஜமாகியிருக்கிறது.
राजा भाई तुम तो गए…..’ एक वादे पर जब सोनम का था गजब का रिएक्शन#RajaRaghuvanshi pic.twitter.com/pCZyF2tlSG
— NBT Hindi News (@NavbharatTimes) June 18, 2025
மே 23 அன்று மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சி பகுதிக்கு தேனிலவுப் பயணமாகச் சென்ற இவர்கள் இருவரில், ராஜா மட்டும் இறந்து போனார். ஜூன் 2 அன்று, ராஜாவின் சடலம் ஒரு பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது விபத்து என எண்ணப்பட்டாலும், போலீசாரின் தீவிர விசாரணையால், இது ஒரு நன்கு திட்டமிட்ட கொலை என உறுதி செய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கின் பின்னணியில், சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது முந்தைய காதலன் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண விழாவின் போது வைரலான வீடியோவில், ராஜா சோனத்திடம், “நான் உனக்கு தேநீர் தயாரிப்பேன், மாதம் ஒரு முறை ஷாப்பிங், வருடத்தில் ஒரு தடவை வெளிநாடு அழைத்துச் செல்வேன்…” என ஆசைமொழிகள் சொன்னார்.
அதே நேரத்தில் சோனம், “அவர் எங்கே போனார், யாருடன் போனார் என்று கேட்பேன்… விருந்துக்கே விடமாட்டேன்…” என்று பதிலளித்தார். அந்த புன்னகையின் பின்னால் மறைந்திருந்தது கொலைக்கான திட்டம் என்பதை யாரும் நம்பவே முடியவில்லை. விசாரணையின் போது, சோனம் தனது முன்னாள் காதலன் ராஜ் குஷ்வாஹாவின் உதவியுடன், மூன்று ஒப்பந்தக் கொலையாளிகளை பணியமர்த்தியிருப்பது தெரியவந்தது.
இவர்களது உதவியுடன் ராஜாவை சிரபுஞ்சியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசி கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு, இது திடீர் கொள்ளை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சோனம், ராஜாவின் மொபைல் போன் மற்றும் நகைகளை மறைத்து செய்துள்ளார். ஆனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அழைப்பு விவரங்கள், சிசிடிவி காட்சிகள், ஒரு சாட்சியின் வாக்குமூலம் உள்ளிட்டவை வழக்கை மாற்றியமைத்தன.
இவை அனைத்துக்கும் மேலாக, ராஜாவின் சகோதரர் சச்சின், தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு சீராகவேண்டும் என்ற நோக்கத்தில், சோனமும் அவரது குடும்பமும் தாந்திரீக சடங்கில் நரபலி கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும், ராஜாவின் புகைப்படம் தலைகீழாக சுவரில் தொங்கவைக்கப்பட்டதையும், சாட்சிகளும் உறுதிசெய்துள்ளனர். இது வழக்கை தாந்திரீக கோணத்தில் பார்க்கும் அளவுக்கு மாற்றியுள்ளது.
மேகாலயா காவல்துறையினர் தற்போது இந்த வழக்கை முழுமையாக விசாரணை செய்து வருகின்றனர். சோனம் ரகுவன்ஷி மற்றும் மற்ற நான்கு குற்றவாளிகள் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். வியாழக்கிழமை, அவர்கள் அனைவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். போலீசார், இவர்கள் மீதான காவல்கால நீட்டிப்பைக் கோரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.