
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
முதற்கட்டமாக பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் 150 மில்லி, ஒரு லிட்டர் என்ற 2 அளவுகளில் நீரை இலவசமாக பெறலாம்.