
தஞ்சையில் உள்ள சரபோஜி அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமை தொகை தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் தரும் விண்ணப்பங்களுக்கு 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும். இந்த முகாம்கள் ஜூலை இரண்டாவது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெறும் நிலையில், இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள் எனவே இதில் எப்படி விண்ணப்பிக்க முடியும் என நீங்கள் யோசிக்க வேண்டாம்.
உள்ளூர் அளவில் தன்னார்வலர்கள் உங்கள் தேடி வந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பற்றி உங்களுக்கு கூறுவார்கள். நீங்கள் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதெல்லாம் குறித்து அவர்கள் சொல்வார்கள். மேலும் இது தொடர்பான தகவல்கள் இனி உங்களது வீட்டிற்க்கே தேடி வரும் என்று கூறினார்.