
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பாசரா என்ற பகுதியில் சரஸ்வதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள சிந்தல் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சரஸ்வதி கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் கோதாவரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக ராகேஷ் (18), வினோத் (18), மதன் (28), ரித்திக் (18) உள்ளிட்ட ஐந்து பேர் பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
బాసరలో గోదావరిలో మునిగి నలుగురు హైదరాబాద్ వాసులు మృతి
నిర్మల్ జిల్లా బాసరలోని గోదావరిలో స్నానానికి దిగి నలుగురు మృతి
ముగ్గురు మృతదేహాలను గుర్తించగా.. గల్లంతైన మరొకరి ఆచూకీ కోసం గాలింపు
పోలీసులకు సమాచారం ఇచ్చిన భక్తులు
హుటా హుటిన సంఘటన స్థలానికి చేరుకొని గాలింపు చర్యలు… pic.twitter.com/7qMDAdzU6F
— Telugu Scribe (@TeluguScribe) June 15, 2025
இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர் அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.