மராட்டியத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் ஆதாம் கஸ் பதான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மனைவியை கொஞ்சம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அண்மையில் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமன் சர்கார்(38) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்து காதலியை சந்தித்துள்ளார். அப்போது அங்கு நிதி பரிவர்த்தனை தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பதான் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியை சரமாரியாக தாக்கினார்.

இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுமன் சர்கார் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பு ஓடிய ஆதாம் காஸ் பதானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.