
சத்தீஸ்கர் மாநிலம் பாலோடாபஜார் மாவட்டம் கும்ஹரி கிராமத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி பரமேஷ்வர் சாஹு (25) என்பவர் ஒரு தூணில் கட்டி வைக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமேஷ்வர் சாஹுவை மணல் முறைகேடுகளை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாக சந்தேகித்து இரண்டு டிராக்டர் ஓட்டுநர்கள் மரக்கட்டைகள் மற்றும் ஃபெல்ட் கொண்டு தாக்கியுள்ளனர்.
छत्तीसगढ़ में रेत माफियाओं का आतंक कम होने का नाम नहीं ले रहा. बलौदा बाजार जिले में एक युवक को मुखबिरी के शक में बीच चौराहे पर खंभे से बांधकर बेल्ट से पीटा जा रहा है.
इससे पहले भी प्रदेश में खनन माफियाओं के आतंक का कई मामला सामने आ चुका है, फिर भी..? #Chhattisgarh #Balodabazar pic.twitter.com/j99kVQPmcg
— 𝐒𝐮𝐫𝐲𝐚 𝐏𝐫𝐚𝐤𝐚𝐬𝐡 𝐒𝐮𝐫𝐲𝐚𝐤𝐚𝐧𝐭 (@SPsuryakant) June 15, 2025
பரமேஷ்வர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பழைய காதல் விவகாரமும், மின் விரோதமும் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி யஷ்வந்த் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.