பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் மாயகஞ்ச் கிராமத்தில், ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  அவர் கணவர் இறந்த பிறகு மனரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதால் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென 11,000 வோல்ட் மின் கம்பத்தில் ஏறினார்.

பின்னர் மின் கம்பியில் ஏறி நின்று அழுதுக் கொண்டிருந்த பெண்ணை கண்ட கிராம மக்கள், சாமர்த்தியமாக துறைமுக மின் நிலையத்துக்கு தகவல் கொடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கச் செய்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து, அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர். பலரின் முயற்சிக்குப் பின், அவர் மெல்ல நடந்து கீழே இறங்கியபின் பாதுகாப்பாக வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மைத்துனி தொடர்ந்து மனதளவில் தொந்தரவு செய்து, அவமானப்படுத்துவதால் தற்கொலைக்கு முயற்சித்ததாக அந்தப் பெண் கூறியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களிலும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. ஒரு இளம் பெண் துன்புறுத்தலால் தற்கொலைக்கு முயற்சி செய்ததற்குப் பிறகு, அந்த மைத்துனியின் மீது  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என  கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பெண்கள் எதிர்கொள்ளும் மனரீதித் துன்புறுத்தல்களை நெருங்கி கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.