மகாராஷ்டிராவில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஆசையாக சமோசாவை வாங்கி சாப்பிட்டு பெரும் இன்னல்களை சந்தித்துள்ளார். அதாவது இவர்  கடையிலிருந்து வாங்கி வந்த சமோசாவை சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை உடனே உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அதன் பின் அந்த சமோசாவை சோதனை செய்ததில் அது கெட்டுப்போய் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த சமோசாவில் புழுக்கள் இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.