
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு 16 வயது சிறுமியை மாணவர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 16 வயது சிறுமிக்கு ஒரு 8 மட்டும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஒரு 19 வயது இளைஞருடன் சேர்ந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்த போலீசார் சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியதோடு வாலிபரை ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.