அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கின் ஜியான்(33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் லியுவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் கூறியதாவது, கொரோனா வைரஸை விட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தி இருக்கிறது.

இது கோதுமை, பார்லி உள்ளிட்ட தானியங்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதோடு மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பூஞ்சை பரவும் வாய்ப்பு இருக்கிறது. கைது செய்யப்பட்ட இருவர் சீனாவில் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். சீன அரசின் சதித்திட்டத்தின் படி இருவரும் அமெரிக்காவிற்கு கொடிய பூஞ்சையை கடத்தியுள்ளனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக பூஞ்சை தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவை குறி வைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பூஞ்சையால் பாதிக்கப்படுகின்றனர்.

தற்போது கேலிபோனியா மாகாணத்தில் பூஞ்சை பாதிப்பு அதிகமாக இருக்கிறது. நவேடா ஃப்ளோரிடா மாகாணங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. வாஷிங்டன் உள்ளிட்ட 12 மாகாணங்கள் மட்டுமே பூஞ்சை பாதிப்பிலிருந்து தப்பி உள்ளன. அந்த மாகாணங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.